தும்பை பற்றி தெரியுமா???
பொதுவா தும்பை உடல் உஷ்ணம் உண்டாக்குவதாகவும், சளி அகற்றுவதற்காகவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. ஒற்றைத் தலைவலி, தலைபாரம் நீர்க்கோர்வை, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தும்பை நல்ல தீர்வா இருக்கு.
தும்பை இலைகளை அவ்வப்போது உணவுல சேர்த்துவர, சளி, இருமல், காய்ச்சல் மாதிரி தொந்தரவுகள் அடிக்கடி வராது. இதன் இலைகளையும் பூக்களையும் உலர வச்சு, தேன்ல குழைத்து அப்பப்போ சாப்பிட்டு வர நாட்பட்ட இரைப்பு நோய் தீவிரம் குறையும்.
தும்பைப்பூவின் பயன்கள்;
தீராத தலைவலிக்கு, இரண்டு துளிகள் தும்பைப்பூ சாற்றை மூக்கில் விட்டா தலைவலி குணமாகும்.
தும்பைப்பூவை எண்ணெயில போட்டு காய்ச்சி, தலையில தேய்ச்சு தலை முழுகி வந்தா தலைபாரம், ஒற்றைத் தலைவலி, நீரேற்றம், மூக்கு அடைப்பு நீங்கும்.
நாவறட்சி ஏற்பட்டு அதிக தாகம் இருக்கும்போது, தும்பைப்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வச்சு, கொஞ்சம் தேன் கலந்து பானமாக பருகி வந்தா, நாவறட்சி சரியாகும்.
பூச்சாறு ஐந்து துளியை உலர்ந்த பேரீச்சம்பழத்துடன் கலந்து சுவைச்சு சாப்பிட்டா, உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும், நுரையீரல் பாதையில அடைச்சிட்டு இருக்குற கோழையும் வெளியேறும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks for reading my articles