இடுகைகள்

முருங்கை பிசினின் அற்புதமான சக்தி

படம்
  1. முருங்கை பிசினை உலகத்தில் தெரியாதவர்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  2. உடலை வலுப்படுத்த, உடலை இறுக்க, உடலை நல்ல ஒரு கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இந்த முருங்கை பிசின் மிகவும் நல்லது. 3. முருங்கை பிசின் என்பது மரத்திலிருந்து வெளித்தள்ளக்கூடிய கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. அதாவது முருங்கைமரத்தில் இருக்கக்கூடிய அதீதமான கால்சியம், சுண்ணச்சத்து, நார்ச்சத்து இவையனைத்தும் பிசினாக உருவெடுத்து அந்த மரத்திலிருந்து வெளிதள்ளும். 4. முருங்கை பிசினை ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுத்து தூள் செய்வது மிக எளிது. இந்தத் தூள் செய்த பொடியை இரவுநேரத்தில் கொதிக்கின்ற நீரில் போட்டு அப்படியே வைத்திருந்து அதிகாலையில் வடித்து சாப்பிட்டீர்கள் என்றால் மிக அற்புதமான பலன் கிடைக்கும் 5. நாம் உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று உடலைத் தேற்றக்கூடிய ஒரு சூழல் உண்டு. இது எதுவுமே செய்யத்தேவையில்லை அதிகாலை  ஒருமணிநேரம் நடைப்பயிற்சி செய்து இந்த முருங்கை பிசினை ஊறவைத்து அப்படியே சாப்பிட்டுவிட்டு, பழஉணவை காலை உணவாக  சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் ஒரு அற்புதமான உடற்கட்டு, உடற்வாகு கிடைக்கும்...

முருங்கை

படம்
  முருங்கை கீரை பயன்கள்;   ★  முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். ★ முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். ★ முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். ★ பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. ★ முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். ★ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும். ★ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும். முருங்கைக் காய் பயன்கள்; ★  முருங்கை காயை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். ★  முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ...

தமிழக தொன்மகால விளையாட்டுகள்...

படம்
                       தொன்மகால தமிழகத்தில் பல்வேறு வகையான விளையாட்டுகள் விளையாடப்பட்டது. இந்த விளையாட்டுகள் 100 -க்கும் மேற்ப்பட்டதாக இருந்ததாக  சங்ககால இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.இந்த விளையாட்டுகள்   உடல் வலிமை, மன வலிமை, அறிவு சார்ந்து காணப்பட்டது..நமது தமிழகத்தில் இந்த விளையாட்டுகள் அனைத்து வயது மக்களுக்கும் ஏற்றது போல் அமைக்கப்பட்டுடுள்ளது.மேலும் இந்த விளையாட்டுகள் பல்வேறு பிரிவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது... பிரிவுகள்; * தொன்மகால விளையாட்டுகள் * தற்காப்பு ஆடற் கலைகள் * வெளிக்கள விளையாட்டுகள் * உள்ளக விளையாட்டுகள் *ஆடவர் விளையாட்டு * மகளிர் விளையாட்டு * சிறுவர்,சிறுமியர் விளையாட்டு * சிறுவர்கள் விளையாட்டு * சிறுமியர் விளையாட்டு *குழந்தைகள் விளையாட்டு                   என்று வகைப்படுத்தபட்டுள்ளது....இந்த விளையாட்டுகள்அனைத்தும் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்றது போல்விளையாடப்பட்டது..மேலும் இந்த விளையாட்டுகள் பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.. வகைகள்; * ப...

எதிர்பார்த்தது நில்..

      அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம்.இப்போது நாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம்.... இந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் தடுமாறுகிறோம்... நானும் அந்த சூழ்நிலையில்தான் வாழ்ந்து வருகிறேன்... குடும்பத்தில் முதல் மகனாக பிறந்தவர் நான்... diploma படிப்பை முடித்து விட்டு ஒரு கூலி தொழிலாளராக வாழ்ந்து வருகிறேன்.. எப்போதும் நிலைத்து நிற்கும் மனநிலையில் இருந்த நான் ‌இப்போது தடுமாறி நிற்கிறேன்... அம்மாவுக்கு கண் பிரச்சினை.. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.30,000-ம் செலவாகும்.. இவ்வளவு நாள் சேமிப்பு எதுவும் இல்லை.. சகோதரர் சென்னையில் வேலை செய்து வருகிறார்... அவர் செலவை ஏற்றுக் கொள்ள முடியும்.என் சூழ்நிலையில் என்னால் செலவை ஏற்றுக்கொள்ள முடியாது...கலங்கி நிற்கிறேன்... ஆகையால் நண்பர்களே இவ்வளவு நாள் சேமிப்பு எதுவும் இல்லாமல் இருந்த நான் இப்போது அடுத்தவர் கைகளை எதிர்பார்த்தது நிற்கிறேன்...நம் வாழ்க்கையில் எப்போது பிரச்சினை வரும் என்பது தெரியாது.. அது வரும்போது பதட்டம் அடைவதை விட முன் எச்சரிக்கையுடன் வாழ பழகி கொள்ளுங்கள்... எதிர்ப...

தேனீர் எனும் தேவதை

  தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் கூலி தொழிலாளர்களாக வாழ்கின்றனர். இவர்களில் பலர், ஒருவேலை உணவுக்காக ஒருநாள் முழுவதும் வேலை செய்யும் நிலை உள்ளார்கள். இவர்கள் பெரும்பாலும் நேரங்களில் தேனீறையே உணவாக உட்கொள்கின்றனர். நானும் சில நேரங்களில் உணவுக்கு பதிலாக தேனீறையே பருகி உள்ளேன்...என்னை பொறுத்தவரையில் தேனீர் என்பது தேவதையே... ஆம் நண்பர்களே என் வாழ்க்கையில் பல நேரங்களில் தேனீர் உற்ற நண்பனாக உள்ளது..ஆம், என் தனிமை நேரங்களில் தேனீர் எப்போதும் என்னுடனே பயணித்து உள்ளது...என் கண்ணீரில்,என் மகிழ்ச்சியில்,என் சிரிப்பில்,என் துன்பத்தில் எப்போதும் என்னுடன் என் தேனீர் தேவதை...என் மனம் உடையும் போது பல தூரங்கள் பயணித்து தேனீர் அருந்தியுள்ளேன்.நண்பர்களே வாழ்க்கையில் பல்வேறு நேரங்களில் நாம் அழும் போது ஏதாவது ஒன்றை தேடி போவோம்.. நான் தேனீரை தேடி.... நண்பர்களே!! ஒரு தேனீர் பல்வேறு நண்பர்களுக்கு பல முறையில் பல விதமாக உதவி செய்கிறது...ஒரு தேனீருக்கு  இவ்வளவு திறன் உள்ளது என்றால் நீங்கள் எவ்வளவு திறன் உள்ளவர்கள் என்று எண்ணி பாருங்கள்..உங்கள் தேடலை விரிவுபடுத்தி கொள்ளுங்கள்.வானம் வசப்படும்........நன்றி...